» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது
புதன் 19, ஜனவரி 2022 10:11:27 AM (IST)
சிவகிரி சோதனை சாவடியில் பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சிவகிரி சோதனை சாவடியில் பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் முககவசம், ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது அவர் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிவகிரி வடக்கு ரத வீதியை சேர்ந்த ரகுராமன் மகன் ரத்தினகுமார் (24) என்பதும், மதுபோதையில் வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து ரத்தின குமாரை கைது செய்து சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.