» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா விற்பனை: கத்தியைக் காட்டி மிரட்டி தப்ப முயன்ற 2 இளைஞர்கள் கைது!

வெள்ளி 17, ஜூலை 2026 7:34:59 AM (IST)

கோவில்பட்டியில் கூடுதல் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களைக் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த துணை மின்நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்களைக் காவல் துறையினர் பிடிக்க முயன்றனர். 

அப்போது அந்த 2பேரும் கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோட முயன்றபோது, காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்துச் சோதனை செய்தனர். இவ்விசாரணையில், அவர்கள் செட்டிகுறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த கன்னிராஜ் (22) மற்றும் கோவில்பட்டி இந்திரா நகர் முதல் தெருவைச் சேர்ந்த கருத்தப்பாண்டி (20) என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு போட்டுக் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory