» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா விற்பனை: கத்தியைக் காட்டி மிரட்டி தப்ப முயன்ற 2 இளைஞர்கள் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 7:34:59 AM (IST)
கோவில்பட்டியில் கூடுதல் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களைக் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த துணை மின்நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞர்களைக் காவல் துறையினர் பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்த 2பேரும் கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோட முயன்றபோது, காவல் துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்துச் சோதனை செய்தனர். இவ்விசாரணையில், அவர்கள் செட்டிகுறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த கன்னிராஜ் (22) மற்றும் கோவில்பட்டி இந்திரா நகர் முதல் தெருவைச் சேர்ந்த கருத்தப்பாண்டி (20) என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 400 கிராம் கஞ்சா மற்றும் கத்தி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு போட்டுக் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காக்க தூத்துக்குடியில் பஞ்ச தெய்வ வழிபாடு
ஞாயிறு 26, ஜூலை 2026 3:08:20 PM (IST)

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து விசைப்படகு : மீனவர்கள் 9 பேர் உயிர்தப்பினர்!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:39:56 PM (IST)

நிலத் தகராறில் துப்பாக்கி முனையில் மிரட்டல்: குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி கட்டிடம் இடிப்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 1:26:09 PM (IST)

தூத்துக்குடியில் மாயமான அண்ணன் - தங்கை: 5 மணி நேரத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் மீட்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:28:32 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதாவின் 444-வது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:17:35 AM (IST)

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53-வது பெற்றோர் தினவிழா: மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பங்கேற்பு!
ஞாயிறு 26, ஜூலை 2026 11:09:42 AM (IST)








