» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் ஜெபமாலை பவனி!

சனி 30, மே 2026 8:23:25 PM (IST)



தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில், தேவமாதாவின் வணக்க மாதத்தையொட்டி மரியாயின் இயக்கத்தின் 35-ஆவது ஆண்டு விழா மற்றும் ஜெபமாலை பவனி நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலய வளாகத்திலிருந்து சிறப்புப் பிரார்த்தனையுடன் இந்த ஜெபமாலை பவனி தொடங்கியது. அங்கிருந்து புறப்பட்ட பவனியானது, ஆண்டுதோறும் அன்னை பனிமய மாதாவின் தங்கத்தேர் வலம் வரும் முக்கிய ரத வீதிகள் வழியாகப் பிரம்மாண்டமாக வலம் வந்தது.

உலக சமாதானம் வேண்டியும், இயேசு மற்றும் மரியாளின் திரு இருதயங்களுக்கு எதிராகச் செய்யப்படும் நிந்தனைகளுக்குப் பரிகாரமாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரம் சிறந்து செழிக்கவும் வேண்டி இந்த விசேஷப் பவனி நடத்தப்பட்டது. பவனியில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் தங்களது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, பக்திப் பாடல்களைப் பாடியும் ஜெபமாலை செபித்தும் ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த பவனி விழாவில் மரியாயின் இயக்கத்தினர், தூய பனிமய மாதா பேராலயப் பங்கு மக்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கத்தோலிக்க இறைமக்கள், அருள் சகோதரர்கள் மற்றும் அருள் சகோதரிகள் எனத் திரளானோர் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கான அனைத்து சிறப்பான ஏற்பாடுகளையும் பனிமய மாதா பேராலயப் பங்குத்தந்தை ஜான் செல்வம் மற்றும் மரியாயின் இயக்க நிர்வாகிகள் இணைந்து ஒருங்கிணைத்துச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory