» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி கல்லூரியில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா

சனி 30, மே 2026 4:51:53 PM (IST)



கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறப்பு விழா கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ஜெயபாலன், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார்.

அலுவலக கட்டிடத்தை கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவரும் நகர்மன்ற தலைவருமான ஆர்.எஸ்.ரமேஷ் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். விழாவில் பத்திரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன்,கல்லூரி பொருளாளர் எஸ்.எம் கண்ணன், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண், ராஜ்மோகன், சரவணக்குமார், தங்கமணி உள்பட கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.கல்லூரி பேராசிரியர் விஜயகோபாலன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory