» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு
புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)
தூத்துக்குடி அருகே பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தூத்துக்குடி துறைமுக தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆவரைகுளம் கிராமம் காலனி தெருவில் வசிப்பவர் முனியசாமி. இவரது மகன் லிங்கராஜ் (27). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஓட்டப்பிடாரத்திலிருந்து ஓசனத்து செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)

சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழாவில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 3, மார்ச் 2026 8:17:14 AM (IST)

தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:12:59 AM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு: மதுரை நீதிமன்றம் அறிவிப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 8:07:02 AM (IST)

பூனை குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 7:50:52 AM (IST)










