» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)

தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பெரிய சாரைப்பாம்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமம் வடக்கு தெருவில் வசிப்பவர் பொன்செல்வம். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று திடீரென 6 அடி நீளமுள்ள பெரிய சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டினர்.
உடனடியாக இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
சமையலறையில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்து மீட்டனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பொன் செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமம் வடக்கு தெருவில் வசிப்பவர் பொன்செல்வம். இவரது வீட்டின் சமையலறைக்குள் இன்று திடீரென 6 அடி நீளமுள்ள பெரிய சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறியடித்தபடி வீட்டை விட்டு வெளியேறி கதவைப் பூட்டினர்.
உடனடியாக இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
சமையலறையில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாவகமாகப் பிடித்து மீட்டனர். பிடிபட்ட பாம்பு பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்குப் பொன் செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









