» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்பவர் இந்தியா சார்பில் உலக நுகர்வோர் தின விழா

சனி 15, மார்ச் 2025 4:00:14 PM (IST)



தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் சார்பில் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது

விழாவிற்கு அமைப்பின் கௌரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினருமான ஆ. சங்கர் தலைமை வகித்தார். விழாவில் நிலையான வாழ்க்கை முறைக்கு நியாயமான மாற்றம் என்ற விழிப்புணர்வு பதாகையை இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளரும், நீதிபதியுமான கலையரசி நீனா வெளியிட்டார். 

அவர் பேசும்போது,. "நுகர்வோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் குறிப்பாக மொபைல் போன் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என கூறினார். விழாவில் என்எல்சி தலைமை பொது மேலாளர் அனந்த ராமானுஜம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆனைய திட்ட இயக்குனர் சிவன் சர்மா, புனித மரியன்னை கல்லூரி செயலாளர் அருட்சகோதரி இபானா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory