» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
செவ்வாய் 30, ஏப்ரல் 2024 5:10:40 PM (IST)
தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சிவன் கோவில் தேரடி முன்பும், புதிய பேருந்து நிலையம் முன்பும் நீர், மோர் பந்தல் அமைக்கபட்டுள்ளது. இதில் மாநகர தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் கண்ணன், பொறுப்பாளர் பாலா மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார், அந்தோணி, ஜான், சுதாகர், பிரியதர்ஷின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கினர்.
வவ்வாலுமே 1, 2024 - 12:08:32 PM | Posted IP 162.1*****