» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல் - 2பேர் காயம்!
வியாழன் 25, ஏப்ரல் 2024 4:36:40 PM (IST)
தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதில் 2பேர் காயம் அடைந்தனர்.
குமரி மாவட்டம், மிடாலம் பகுதி உதயமார்த்தாண்டத்தை சேர்ந்தவர் அலெஸ்சாண்டர் மகன் அபிசன் சாண்டர் (32). இவர் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்து வருகிறார். ராமன் துறை பகுதியியை சேர்ந்தவர் அருள் டோனி (37) என்பவரும் அங்கு மீன் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவ தினம் மீன் ஏலம் எடுக்கும் இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டனர்
இதில் அருள் டோனி ஆத்திரமடைந்து அபிசன் சாண்டரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அபிசன் ஆற்றூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருள்டோனி தேங்காபட்டணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.