» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தகராறு செய்து கொலை மிரட்டல்: ரவுடி கைது

சனி 4, மே 2024 8:38:30 PM (IST)

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  சுகாதேவி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, இலுப்பையூரணி கண்மாய் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், அவர் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பரமசிவம் (எ) மந்திரமூர்த்தி (32) என்பதும், அவர் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒருவரை இடைமறித்து அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே மேற்படி பரமசிவம் (எ) மந்திர மூர்த்தியை கைது செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory