» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3பேர் கைது!
புதன் 24, ஏப்ரல் 2024 5:43:02 PM (IST)
தடிகாரன்கோணம் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் நேற்று தடிகாரன்கோணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் காரில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண் டுபிடிக்கப்பட்டது. அதை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்த முயன்ற அதே பகுதியை சேர்ந்த வில்சன், செல்வகுமார், ஜெபராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.