» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பீடி பற்றவைத்தபோது தீப்பற்றி முதியவர் பலி!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 12:10:14 PM (IST)

தூத்துக்குடியில் பீடி பற்றவைத்தபோது ஆடையில் தீப்பற்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகில் உள்ள சிவலூர் கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மாசாணம் (79). இவர் நேற்று கட்டிலில் படுத்தவாறு பீடியை பற்ற வைத்தாராம். அப்போது எதிர்பாராமல் அவரது சட்டையில் தீ பிடித்தது. இதில் பலத்த தீக்காயம் அடை்நத அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ஜானகி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory