» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்ட விரோதமாக மது விற்பனை: 5 போ் கைது
ஞாயிறு 21, ஏப்ரல் 2024 8:32:00 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்த போலீசார், அவா்களிடமிருந்து 82 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, கடந்த 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. மேலும், இந்த நாள்களில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோரை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இதில் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட கண்காணிப்பில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை கைது செய்த போலீசார் அவா்களிடமிருந்த 82 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.