» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் : ஏப்.20ம் தேதி இயக்கப்படுகிறது!

வெள்ளி 19, ஏப்ரல் 2024 9:21:43 PM (IST)

தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் நாளை (ஏப்.20) சனிக்கிழமை இயக்கப்படுகிறது. 

தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் இடையே சாதாரண பொதுப் பெட்டிகளுடன் நாளை (ஏப்.20) சனிக்கிழமை மாலை 04:30 மணிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படுகிறது. 

தூத்துக்குடி மாநகர பொதுமக்கள் இந்தச் சிறப்பு ரயிலை அதிக அளவில் பயன்படுத்த வேண்டுகிறோம் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

வீரபுத்திரன்Apr 21, 2024 - 12:48:08 PM | Posted IP 172.7*****

கூட்டம் அதிகமாக உள்ள தருணங்களில் இதேபோல் ரயில் சேவையை எதிர்பார்க்கிறோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory