» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெரியார் தி.க., கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது: இந்து முன்னணி கோரிக்கை!!

வியாழன் 2, மே 2024 4:20:42 PM (IST)



தூத்துக்குடியில் பெரியார் திராவிடர் கழகத்தின் தெருமுனை கூட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக இந்து முன்னணி மேற்கு மண்டல துணைத் தலைவர் ஆறுமுகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெரு பெல் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அருகே எங்களது இந்து முன்னணி அலுவலகம் செயல்படுகிறது. இன்று (02.05.2024) வியாழக்கிழமை மாலை டூவிபுரம் 5வது மெயின் ரோடு, அண்ணா நகர் 7 சந்திப்பு பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் தெருமுனை கூட்டம் நடைபெற இருக்கிறது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்நேரத்தில் பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் தெருமுனை கூட்டம் எங்கள் இந்து முன்னணி சித்தாந்தத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் கூட்டமாகும். 

எனவே எங்கள் அலுவலகம் முன் நடக்கும் பெரியார் திராவிட கழக கூட்டத்தில் இந்து மதத்திற்கு எதிராகவும் இந்து மத தலைவர்களுக்கு எதிராகவும் ஏதேனும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டால் அதற்கு எங்களது முழு கண்டனத்தையும் எதிர்ப்பையும் அவ்விடத்திலேயே தெரிவிப்போம் என்பதை இதன் மூலம் தங்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், மத்தியபாகம் காவல் நிலையத்திலும் மனு அளிக்கப்பட்டது. இந்து முன்னணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் உடனிருந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory