» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காதல் ஜோடியை மிரட்டி செயின் பறித்த காவலர் கைது!!

வியாழன் 28, மார்ச் 2024 5:30:37 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர்  பூங்காவில் காதல் ஜோடியை மிரட்டி செயின் பறித்த ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரை பகுதியில் கடந்த மாதம் இளம் ஜோடியினர் அமர்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர், அவர்களை செல்போனில் படம் பிடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 1½ பவுன் தங்க நகையையும் பறித்து சென்று விட்டதாக தகவல் பரவியது. அதன்பிறகு 2 நாட்கள் கழித்து தெர்மல்நகர் கடற்கரையில் இருந்த வாலிபர், முத்துநகர் கடற்கரைக்கு சென்றார். 

அப்போது, அவரிடம் நகை பறித்த நபரும் அங்கு மோட்டார் சைக்கிளுடன் இருந்தார். உடனே வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த நபரை மடக்கி பிடிக்க முயன்றார். உடனே அந்த நபர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி சென்றார். அதனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வாலிபர் பாலகணேஷ் என்பவர் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், வாலிபரிடம் நகை பறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த டைட்டஸ் மகன் டென்சில்ராஜா என்ற வெனிஸ் (30) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 2020-ம் ஆண்டு மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியனில் பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான டென்சில் ராஜாவை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடினர். இந்த நிலையில் டென்சில் ராஜாவை இன்று போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் வாலிபரிடம் நகை பறித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

Jhon CooperMar 30, 2024 - 11:38:04 AM | Posted IP 162.1*****

what kind of police is he?

tamilanMar 29, 2024 - 10:49:16 AM | Posted IP 162.1*****

முத்து நகர் கடற்கரையில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொறுத்த வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory