» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் மகன்கள் கைது: தாய் தற்கொலை முயற்சி!

செவ்வாய் 26, மார்ச் 2024 10:38:05 AM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் மகன்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ் நகரை சேர்ந்த மாசிலாமணி மகன் முனியசாமி (45). உப்பள தொழிலாளி. இவருக்கும் முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்த ஜேசுராஜ் மகன்கள் சுதாகர், சதீஷ் ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக முனியசாமியை அண்ணன் தம்பி இருவரும் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவந்த நிலையில் அந்த 2 பேரும் நேற்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அவர்களது தாயார் நிர்மலா (45), நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஈஸ்வரமூரத்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory