» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மலேசியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: 2026 முதல் அமல்..!!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:12:01 PM (IST)
அடுத்த ஆண்டு முதல் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தொலைத்தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் கூறியுள்ளதாவது: வரும் 2026ம் ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது.
இதன் மூலம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டா கிராம், ஸ்நாப் சாட் போன்ற தளங்களில் சமூக ஊடக கணக்கை உருவாக்குவதோ அல்லது பராமரிப்பதோ சட்டவிரோதமானதாக அறிவிக்கப்படும். இதனுடன், சுரண்டல், சைபர்புல்லிங், பொருத்த மற்ற உள்ளடக்கத்துக்கு ஆளாகுதல் போன்ற ஆன்லைன் அச்சுறுத்தல்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தத் தடையை அமல்படுத்துவதற்கு முன்பாக இதற்கான கட்டமைப்பை இறுதி செய்வதற்காக தொழில் நுட்ப நிறுவனங்கள், குழந்தைகள் நலக்குழுக்கள் மற்றும் கல்வியாளர்களுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அரசு வரும் டிசம்பரில் இருந்து பதின்ம வயதினருக்கான சமூக ஊடக தடையை அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)










