» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஒரே இரவில் 470 ட்ரோன், 48 ஏவுகணை வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: ஜெலன்ஸ்கி கண்டனம்
வியாழன் 20, நவம்பர் 2025 12:04:16 PM (IST)
உக்ரைன் மீது ஒரே இரவில் 470 ட்ரோன்கள், 48 ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பினார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. அதை ஜெலன்ஸ்கி நிராகரித்ததால், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. போரை நிறுத்த சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. இதற்கிடையில் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்நிலையில், உக்ரைன் மீது நேற்று முன்தினம் இரவு 470 ட்ரோன்கள், 48 ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியது. தாக்குதலுக்குப் பிறகு பற்றி எரியும் கட்டிடங்கள், சேதம் அடைந்த இடங்களின் வீடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா தாக்குதலில் டெர்னோபில் பகுதியில் 9 மாடி குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமாகி உள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டர்கள் காயம் அடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியும் பற்றி எரியும் கட்டிடங்களில் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
கந்தசாமிNov 20, 2025 - 02:36:04 PM | Posted IP 104.2*****
சளைக்காமல் அடிமேல் அடிவாங்கும் உக்ரைன் அமெரிக்கா உன்னை வைத்து பிழைப்பு நடத்துகிறது தெரியாத அப்பாவியாக இருக்கிறான் ஜெலன்ஸிகி
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)











உண்மNov 21, 2025 - 05:02:19 PM | Posted IP 172.7*****