» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தாய்லாந்திலிருந்து ரூ.11.82 கோடி உயர் ரக கஞ்சா கடத்தல்: கேரள மாடல் அழகி அதிரடி கைது
சனி 13, ஜூன் 2026 12:30:17 PM (IST)

தாய்லாந்து நாட்டிலிருந்து 'ஹைட்ரோபோனிக் மரிஜுவானா' எனப்படும் ரூ.11.82 கோடி மதிப்புள்ள சர்வதேச உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி ஹர்ஷா சன்னியைச் சுங்கத்துறை மற்றும் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மும்பை சர்வதேச விமான நிலையத்திற்குப் பாங்காக்கிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்திறங்கிய விமானப் பயணிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, 28 வயதான ஹர்ஷா சன்னியின் நடத்தையில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் கொண்டு வந்திருந்த 'டிராலி' பையை அதிகாரிகள் விரிவாகச் சோதனையிட்டனர். அப்போது அந்தப் பையின் ரகசிய அறைகளில் லாவகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளைப் பிரித்துப் பார்த்தபோது, அதனுள் சர்வதேச சந்தையில் அதீத கிராக்கி கொண்ட 'ஹைட்ரோபோனிக் மரிஜுவானா' (Hydroponic Marijuana) எனப்படும் உயர் ரக போதைப் பொருட்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்தில் மண்ணில்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட காலநிலை மற்றும் நீர் ஊடகங்கள் மூலம் வளர்க்கப்படும் இந்த வீரியமிக்க கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு ₹11.82 கோடி ஆகும். இவ்வளவு பெரிய தொகையிலான போதைப் பொருளை ஒரு மாடல் அழகி கடத்தி வந்தது அதிகாரிகளைத் திகைக்க வைத்துள்ளது.
கைதான ஹர்ஷா சன்னி கேரளாவின் மாடலிங் உலகில் வளர்ந்து வரும் நபராகப் பார்க்கப்பட்டவர். கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிஸஸ் கேரளா' அழகுப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தவர். சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த இவர், தற்போது போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சர்வதேசக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?
வெறும் பணத்தாசைக்காக ஹர்ஷா சன்னி இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாரா அல்லது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியக் முகவராகச் செயல்பட்டாரா என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் போதைப்பொருட்களைக் கடத்தும் பெரிய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இவர் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹர்ஷாவிடம் மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரதமர் மோடி பயணம்: ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!
சனி 13, ஜூன் 2026 11:44:11 AM (IST)

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்: கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சுவாமி தரிசனம்...!
வெள்ளி 12, ஜூன் 2026 5:43:40 PM (IST)

மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு: குடியரசுத் தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வெள்ளி 12, ஜூன் 2026 4:32:09 PM (IST)

ஓமனில் எண்ணெய்க் கப்பலை தாக்கிய அமெரிக்கா: 3 மாலுமிகள் பலி - இந்தியா கண்டனம்!
வியாழன் 11, ஜூன் 2026 4:01:42 PM (IST)

மேற்கு வங்கத்தில் திரிணமூல் கூடாரம் சரிந்தது: ஒரே வாரத்தில் 3-ஆவது எம்பி அதிரடி ராஜிநாமா!
வியாழன் 11, ஜூன் 2026 12:39:46 PM (IST)

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் ச.ஜோசப் விஜய்!
புதன் 10, ஜூன் 2026 5:46:14 PM (IST)









