» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் ச.ஜோசப் விஜய்!

புதன் 10, ஜூன் 2026 5:46:14 PM (IST)



புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய், நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டார்.

அரசுத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்காகத் தமிழ்நாட்டின் முதல்வர் ச.ஜோசப் விஜய் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் தற்போதைய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநிலப் பொதுநல விவகாரங்கள் குறித்துக் குடியரசுத் தலைவரிடம் முதல்வர் சுருக்கமாக விவரித்ததாகத் தெரிகிறது. இச்சந்திப்பு முற்றிலும் பரஸ்பரத் தோழமை மற்றும் மரியாதை நிமித்தமாக மட்டுமே நடைபெற்றதாகத் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory