» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு வங்கம், கேரளத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 4:54:50 PM (IST)
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை நடுநிலையாக உறுதி செய்யும் வகையில் மேற்கு வங்கம் மற்றும் கேரளத்தில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 17, 2026) அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏற்கனவே தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி மாற்றப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்டமாகப் பல முக்கியப் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். தெற்கு வங்க மண்டல ஏ.டி.ஜி.பி-யாக ராஜேஷ் குமார் சிங் அவர்களும், வடக்கு வங்க மண்டல ஏ.டி.ஜி.பி-யாக கே. ஜெயராமன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அசன்சோல்-துர்காபூர், ஹவுரா, பராக்பூர் மற்றும் சந்தன்நகர் ஆகிய நான்கு முக்கிய நகரங்களுக்குப் புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிராசாத், கூச்பெகார், பீர்பூம், முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்குப் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (SP) நியமிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா மத்தியப் பிரிவு துணை ஆணையராக (DCP) ஸ்ரீகாந்த் ஜெகன்னத்ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் புதிய நியமனங்கள்:
கேரளாவில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கேயும் நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியாக இன்பசேகர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடும் தர்மடம் தொகுதி மற்றும் இரிக்கூர் தொகுதிகளுக்குப் புதிய தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று (திங்கட்கிழமை), அஸ்ஸாம் மாநிலத்தில் 5 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டில் 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களையும் தேர்தல் ஆணையம் மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் எவரும் தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மாநில அரசுகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே நாளில் டெலிவரி: அஞ்சல் துறை சார்பில் புதிய சேவை இன்று அறிமுகம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:13:32 PM (IST)

அலுமினிய பாத்திரங்களுக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு
செவ்வாய் 17, மார்ச் 2026 11:46:00 AM (IST)

குடிப்பழக்கத்தால் பாதிப்பு: தந்தைக்குத் கல்லீரலைத் தானமாக வழங்கி உயிர் கொடுத்த மகள்!
செவ்வாய் 17, மார்ச் 2026 11:34:53 AM (IST)

கல்வி உதவித்தொகையில் ரூ.11 கோடி மோசடி: அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
செவ்வாய் 17, மார்ச் 2026 8:44:19 AM (IST)

மக்களவை மாண்பைக் காப்பதில் ஓம் பிர்லா உறுதி: சபாநாயகருக்குப் பிரதமர் மோடி பாராட்டு!
திங்கள் 16, மார்ச் 2026 5:43:33 PM (IST)

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு - ரூ.25 லட்சம் நிவாரண நிதி!
திங்கள் 16, மார்ச் 2026 5:38:50 PM (IST)








