» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க எஸ்மா சட்டம் அமல்: பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:25:37 PM (IST)
அரபு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய 'அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம்' (Essential Services Maintenance Act) மற்றும் 1951-ஆம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
எரிபொருட்களைப் பதுக்குபவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் கைது நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்தை இனி மத்திய அரசே நேரடியாகக் கண்காணிக்கும். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், எரிபொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடையால் உள்நாட்டில் செயற்கையான தட்டுப்பாடு உருவாவதைத் தடுக்கவும், சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளம் பெயர் மாற்றம் மகிழ்ச்சியான தருணம் : கொச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
புதன் 11, மார்ச் 2026 5:10:36 PM (IST)

கோமா நிலையில் உள்ள இளைஞரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!
புதன் 11, மார்ச் 2026 12:26:18 PM (IST)

இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி
புதன் 11, மார்ச் 2026 11:53:28 AM (IST)

சொத்துப் பதிவுக்கு ரூ. 20 லட்சம் வரை பான் எண் கட்டாயமில்லை: மத்திய அரசு அதிரடிச் சலுகை!
புதன் 11, மார்ச் 2026 11:45:15 AM (IST)

விவசாயியின் மகளின் திருமணத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு: கிராம மக்கள் நெகிழ்ச்சி
செவ்வாய் 10, மார்ச் 2026 5:44:52 PM (IST)

எரிவாயு தட்டுப்பாடு: மும்பை, பெங்களூருவில் உணவகங்கள் மூடல் - பொதுமக்கள் அதிர்ச்சி!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:37:46 PM (IST)








