» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாபர் பெயரில் மசூதிகள் கட்டத் தடை கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:45:54 PM (IST)

முகலாயப் பேரரசர் பாபரின் பெயரில் மசூதிகள் கட்டுவதற்கோ அல்லது மசூதிகளுக்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கோ நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் 'பாபர் மசூதி' போன்றே ஒரு மசூதியைக் கட்டப்போவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்தே உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில் மனுதாரர் தரப்பில் பாபர் ஒரு 'படையெடுப்பாளர்' என்றும், அவர் இந்துக்களை அடிமைப்படுத்தியவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.     அவர் பெயரில் மசூதிகள் கட்டுவது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்.     இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதனை விசாரணைக்கு ஏற்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. நீதிமன்றத்தின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு 'திரும்பப் பெறப்பட்டதாகக் கருதி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory