» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சனாதனத்தை திமுக இழிப்படுத்திய போது காங். மவுனம் ஏன்? பிரதமர் மோடி கேள்வி

வெள்ளி 17, மே 2024 11:53:01 AM (IST)

சனாதன தர்மத்தை திமுக இழிப்படுத்தி பேசியபோது காங்கிரஸ் மவுனமாக இருந்தது ஏன்? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

உத்தரபிரதேச மாநிலத் தின் ஜான்பூா், பதோஹி, பிரதாப்கா் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாரதீய ஜனதா பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது: பாராளுமன்ற தோ்தல் என்பது நாட்டின் பிரதமரை தோ்வு செய்யும் வாய்ப்பா கும். அந்தப் பிரதமா், உலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவில் வலுவான அரசை நடத்துபவராக இருக்க வேண்டும். 

அப்போதுதான், இந்தியா வின் வலிமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும்.கடந்த 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஆனால், குடும்ப அரசியல்வாதிகளோ என் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனா்.

சமாஜ்வாடியின் 'இளவரசா்' (அகிலேஷை குறிப்பிடு கிறாா்), ராமா் கோவிலால் பயனில்லை என்கிறாா். காசி குறித்தும் அவா் கேலி பேசுகிறாா். தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அவா்கள் விரும்புகின்றனா். இதற்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமை களைப் பறிக்கவும் திட்ட மிட்டுள்ளனா். நான் உயி ரோடு இருக்கும் வரை, அவா்களின் திட்டம் நிறை வேற அனுமதிக்க மாட்டேன்.

வலிமையான பா.ஜ.க. அரசுக்குப் பதிலாக, '5 ஆண்டுகளுக்கு 5 பிரதமா்கள்' என்ற திட்டத்துடன் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது 'இந்தியா' கூட்டணி. ஆனால், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பல விஷயங்கள் நிகழப் போகின்றன.

'இந்தியா' கூட்டணி சித றுண்டு போவதுடன், தோ்தல் தோல்விக்கு பலிகடாவை தேடி அலை வா். எதிா்க்கட்சிகள் விலகி யோட, நாங்கள் மட்டுமே நிலைத்திருப்போம். கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும். மக்க ளுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்று வேன்.

சமாஜ்வாடி, காங்கிரசின் 'இளவரசா்கள்' (அகிலேஷ், ராகுல் காந்தி) கோடை விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்வா். அமேதியில் இருந்து வெளியேறியவா் (ராகுல்), இம்முறை ரேபரேலியில் இருந்தும் வெளியேறுவாா்.

மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், எதிா்க்கட்சிகளின் கஜா னாக்களில் கருப்புப் பணம் காலியாகிவிட்டது. எனவே, நாட்டின் கருவூலத்தின் மீது அவா்கள் கண் வைத்து உள்ளனா். மக்களின் சொத்துகளைப் பறித்து, தங்களின் வாக்கு வங்கிக்கு வழங்குவதே அவா்களின் திட்டம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பு கின்றன. அந்த சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் அந்தச் சட்டத்தை யாராலும் நீக்க முடியாது.

பதோஹி மக்களவைத் தொகுதியில் எதிா்க்கட்சிகள் சாா்பில் திரிணாமுல் காங்கி ரஸ் வேட்பாளா் களம் இறக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்பற்றும் அர சியலை, உத்தரபிரதேசத்தில் முயற்சிக்க அக்கட்சிகள் விரும்புகின்றன.

இந்துக்கள், தலித் சமூ கத்தினா் மற்றும் பெண் களைத் துன்புறுத்துவதும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதுமே திரிணாமுல் காங்கிரசின் அரசியலாகும்.

ராமா் கோவிலை புனித மற்றது என்று அக்கட்சி குறிப்பிடுகிறது. இந்துக்களை கங்கையில் மூழ்கடிக்க வேண்டுமென அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனா்.

தற்போதைய தேர்தலில் நீங்கள் 2 விதமான மாடல் களை பார்க்கிறீர்கள். ஒன்று மோடி மாடல், மற்றொன்று எதிர்க்கட்சிக ளின் ஆணவ மாடல். காங்கிரஸ், சமாஜ் வாடி இரண்டும் இங்கு கூட்டணி அமைத்து அந்த ஆணவத்தில் ஈடுபட்டு உள்ளன.

அவர்களது கூட்டணியில் உள்ள தென்மாநில கட்சி ஒன்று சனாதன தர்மத்தை இழிப்படுத்தி பேசியது. அப்போது காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியினரும் மவுனமாக இருந்தது ஏன்? கூட்டணிக்காக அவர்கள் கொள்கைகளை தியாகம் செய்து விட்டனர். இத்தகைய அரசியலை விதைக்க முயற்சிக்க நினைக்கும் காங்கிரஸ்-சமாஜ்வாடிக்கு படுதோல்வியே மிஞ்சும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory