» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு தடை: மத்திய அரசு திடீர் உத்தரவு
சனி 14, மே 2022 10:22:52 AM (IST)
வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரஷியா உக்ரைன் போர் உள்ளிட்ட உலக விவகாரங்களால் கடந்த சில நாட்களாக உலக அளவில் கோதுமை விலை ஏறி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச அளவில் கோதுமை விலை உயர்ந்து வருகிறது.
இதையடுத்து இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள், அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலருக்கு மட்டும் கோதுமையை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி கோதுமை ஏற்றுமதி செய்பவர்கள், ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து கோதுமைக்கான தொகையை பெற்றதற்கான கடிதத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது : ராகுல் காந்தி பேச்சு!
திங்கள் 16, மே 2022 10:46:41 AM (IST)

மத்தியப் பிரதேசத்தில் 3 காவலர்கள் சுட்டுக் கொலை: வேட்டைக்காரர்கள் வெறிச்செயல்!
சனி 14, மே 2022 5:35:40 PM (IST)

கோதுமை ஏற்றுமதிக்கு தடை: விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!
சனி 14, மே 2022 3:47:34 PM (IST)

டெல்லியில் 4 மாடி வணிக கட்டிடத்தில் தீவிபத்து: 27 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!
சனி 14, மே 2022 12:15:06 PM (IST)

வீட்டின் தனி அறையில் 22 நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன்- பெற்றோர் மீது வழக்கு!
சனி 14, மே 2022 11:40:12 AM (IST)

தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி: மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
வெள்ளி 13, மே 2022 4:59:46 PM (IST)
