» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது ‍ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செவ்வாய் 16, ஜனவரி 2024 1:19:04 PM (IST)

காவி உடையில் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் பகிர்ந்திருந்த நிலையில், வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில், "133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவிய தமிழ்நாடு. தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்தவர் திருவள்ளுவர்.

உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி! - என்று தெரிவித்துள்ளார். காவி உடையில் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் பகிர்ந்திருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இக்கருத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory