» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
நாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம்
வெள்ளி 15, டிசம்பர் 2023 12:23:54 PM (IST)

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று காலை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குப்பிகளை வீசிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று காலை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி கே.சுரேஷ் கூறுகையில், "எங்கள் கோரிக்கை உண்மையானது. இந்தத் தாக்குதலானது மக்களவை அறைக்குள் நடந்ததுள்ளது. இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது. பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "கேள்வி கேட்பது எங்களுடைய கடமை. எங்கள்மீது குற்றம் சாட்டி, நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று கூறினால், அந்த பிரச்சினையை அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது என்று அர்த்தம். இது குறித்து பிரதமர் ஏதாவது தெரிவித்திருக்கிறாரா?” என்று வினவினார். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)











INDIANDec 22, 2023 - 03:37:25 PM | Posted IP 172.7*****