» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன்: சசிகலா அறிவிப்பு
வியாழன் 15, செப்டம்பர் 2022 3:33:20 PM (IST)
அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன் என்று சசிகலா கூறியிருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியது, அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம் என்றும், நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் எனவும் தெரிவித்தார். பன்னீர்செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் என்றால் கேள்விக்கு? நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் எனவும் அவர் பதிலளித்தார்.மேலும் திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, பழைய பழனிச்சாமி இல்லை எனக் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் எப்படி இருக்கிறார் என நீங்கள்தான் கூற வேண்டும் என்றார். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
PUTHIYA VARKALSep 15, 2022 - 04:26:46 PM | Posted IP 162.1*****
இவருக்கு என்ன தெரியும் ? ஜெ. இருந்தவரை கட்சியில் இவருக்கு எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. ஜெ. போன்ற ஒரு ஆளுமைமிக்க பெண்மணிக்கு இவர் எப்படிப்பட்டவர் என்று. நன்றாக தெரியும். இவரால்தான் ஜெ க்கு NEGATIVE VOTES. EPS மட்டும் தான் அதிமுக தலைமைக்கு பொருத்தமானவர் EPS அவர்கள் ஜெ . போல சிறந்த ஆளுமை பண்பு உள்ளவர்..
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)











எவன்Sep 17, 2022 - 12:20:10 PM | Posted IP 162.1*****