» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
வேப்பலோடை அரசுப்பள்ளியில் பசுமை அடர்வனம்: மண்பரிசோதனை மண் எடுக்கும் நிகழ்ச்சி!
சனி 3, பிப்ரவரி 2024 4:32:00 PM (IST)
வேப்பலோடை அரசுப்பள்ளியில் பசுமை அடர்வனம் உருவாக்கத்திற்கு மண்பரிசோதனை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளிகளில் பள்ளி கல்வித்துறையோடு இணைந்து தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் "பள்ளி பசுமை அடர்வனம்" உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
அதற்காக வேப்பலோடை மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மண் பரிசோதனை செய்து மண்ணுக்கேற்ற மரங்களை நடவு செய்து பள்ளி பசுமை அடர்வனம் உருவாக்கத்திற்கு, மண்பரிசோதனை செய்வதற்காக மண் எடுக்கும் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் ஜி. சேகர் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் ஜாய்பிரியா, பள்ளிப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறவனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உருப்பினருமான எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு மண் எடுக்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து மண்ணை சேகரித்தார். இதில் பள்ளி பசுமைப்படை மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் நன்றி கூறினார்.