» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டி
புதன் 31, ஜனவரி 2024 5:48:29 PM (IST)
தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளினை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் கனகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ் துறை அலுவலர்கள் மலையரசி மற்றும் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.