» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
உலக அளவிலான சிலம்பப் போட்டி: தூத்துக்குடி சிலம்ப மாணவ, மாணவிகள் சாதனை!
புதன் 31, ஜனவரி 2024 4:40:37 PM (IST)
தாய்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ, மாணவிகள் வெற்றிபெற்றனர்.
தாய்லாந்தில் உள்ள பட்டாயாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற பல்வேறு நாடுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ மாணவிகள் ஒற்றைக்கம்பு பிரிவில் மாணவி இளநங்கை தாரகை முதலிடமும், சிலம்பம் தொடும் முறை பிரிவில் பூவரசன் முதலிடமும் , அலங்கார சிலம்பம் போட்டி யில் பிரவீன் முதலிடம் பெற்று சாதனை படைத் தனர்.சாதனை படைத்த மாணவ மாணவிகளை அஇஅதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முக நாதன் மாணவர்களை வாழ்த்தினார்.இந்நிகழ்ச்சி யில் பயிற்சியாளர் கராத்தே டென்னிசன் கலந்துகொண்டார்.