» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சாரண சாரணியர் பயிற்சி ஆசிரியர்களுக்கு டெலஸ்கோப் கையாளும் பயிற்சி
புதன் 31, ஜனவரி 2024 3:08:07 PM (IST)
கோவில்பட்டியில் சாரணசாரணியர் பயிற்சி ஆசிரியர்களுக்கு டெலஸ்கோப் கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி சாரணர்அடிப்படை பயிற்சியினை கோவில்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மேற்கொண்டனர். இவர்களுக்கு சாரணர்களாக பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நற்பண்புகளான பிறருக்கு உதவதல்,பெரியவர்களுக்கு மரியாதை செய்தல், பணிவாக பதிலளித்தல், சாலைவிதிகளை கடைபிடித்து ஆபத்தில்லாத பயணம் மேற்கொள்தல், ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றி முதலுதவி செய்தல், பேரிடரில் எவ்வாறு செயல்பட்டு பிறரைகாப்பாற்றுதல்,
திசைகளை அறிதல், தனியாக திசை தெரியாமல் தவிக்கும் நேரங்களில் எப்படி திசை அறிதல் மற்றும் செல்போன் செயலிழந்த நேரத்தில் இரவில் நட்சத்திரங்களை கொண்டு திசை அறிதல், எட்டு கோள்களை அறியவும்,மாணவர்களுக்கு காணசெய்ய தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் முத்துசாமி மாநில செயற்குழு உறுப்பினர் பங்கேற்று விளக்கினார்.
மாநில சாரண பயிற்சியாளர் சி நடராஜன் சிறப்பாக பயிற்சி அளித்தார். சாரண இயக்க மாவட்ட செயலர் மோகன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நிறைவு நாளில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினா தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி பிரபாகுமார், கோவில்பட்டி கல்வி மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி பயிற்சி ஆசிரியர்களை பாராட்டினார்கள்.