» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பயின்றவர்கள் குடும்பக் கூடுகை!

புதன் 31, ஜனவரி 2024 9:52:41 AM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 1969-70இல் எஸ்.எஸ்.எல்.சி. பயின்றவர்களின் குடும்பக் கூடுகை எஸ்.ஏ.தாமஸ் கலையரங்கில் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமையில் நடைபெற்றது. 

சுமார் 35 பேர் தங்களது குடும்பத்துடன் கூடுகை யில் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற குருவானவர் தேவராஜ் ஞானசிங்  ஆரம்ப ஜெபம் செய்து குடும்பக் கூடுகையை துவக்கி வைத் தார்.ஸ்டீபன்  வரவேற்புரை ஆற்றினார்.அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற குருவானவர் தனசிங், தின கரன் போஸ், ஜெபசீலன், டாக்டர்.குமரகுருபரன், ராஜகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

பின்னர் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மறைந்த முன்னாள் மாணவர் டாக்டர் பன்னீருக்கு இரங்கல் பிரார் த்தனை  ஏறெடுக்கப்பட்டது. பள்ளி தாளாளர் சுதாகர்  கலந்து கொண்டு வாழ்த் துரை வழங்கினார். நிறைவு ஜெபம் செய்யப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது. கூட்ட ஏற்பாடுகளை பொன் ராஜ் ஒருங்கிணைப்பாளர் கள் கண்மனி, பொன்ரத்தி னம், பால்ராஜ், ராஜகுமார், ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory