» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி தூய மாற்கு மழலையர் துவக்கப்பள்ளி ஆண்டு விழா

ஞாயிறு 14, ஜனவரி 2024 7:48:15 PM (IST)



நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஆண்டு விழா தூய மாற்கு ஆலய வளாகத்தில் நடந்தது. 

கேகரகுரு ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். சபை ஊழியர் ஜெனோ வேதபாடம் வாசித்தார். பள்ளி தாளாளரும், தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவருமான சாமுவேல் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி முன்னிலை வகித்தார். ஆசிரியை எஸ்தர் ஜெபமலர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி பரமேஸ்வரி, கிறிஸ்டிசாமுவேல் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாணவ_ மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இதையடுத்து மாணவ_ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் , தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ_ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை கிறிஸ்டி சாமுவேல் அன்பளிப்பாக வழங்கினார். இதில் சேகர பொருளாளர் ஜெயச்சந்திரன் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை செல்வஜோதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சாமுவேல், தலைமை ஆசிரியை செல்வராணி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory