» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அரசு பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அமைப்பின் 20 வது ஆண்டு மலர் வெளியீடு!
செவ்வாய் 12, டிசம்பர் 2023 5:48:32 PM (IST)
குருவிகுளம் அரசு பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அமைப்பின் 20 வது ஆண்டு மலர் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 142 வது பிறந்த நாள் விழாவில் குருவிகுளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ். திட்ட அமைப்பின் 20 வது ஆண்டு மலரை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் கோ.பெரியண்ணன், இதயகீதம் ஆசிரியர் ராமானுஜம் வெளியீடு செய்தார்.
பள்ளியின் திட்ட அலுவலர் நல்லாசிரியர் சுப்பாராசுவை ஆஸ்திரேலியா தமிழ் சங்க செயலாளர் மாலதி ஆனந்த கிருஷ்ணன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், கோவில்பட்டி "அஸ்ரோ கிளப்” ஒருங்கிணைப்பாளர் கோ.சுரேஷ்குமார் உட்பட பலர் பாராட்டினர்.
SURESHKUMAR GDec 12, 2023 - 08:44:41 PM | Posted IP 172.7*****