» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புனித லூக்கா சமுதாய கல்லூரியில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி

சனி 11, நவம்பர் 2023 4:19:05 PM (IST)



நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் மனித நேய மேம்பாட்டு மன்றத்தின் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்தார். உதவி குரு.பொன்செல்வின் அசோக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார்.கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயசந்திரன் வரவேற்றார். ஊழியர் தியோடர் சாமுவேல் வாழ்த்தி பேசினார். 

நிகழ்ச்சியில் நோயால் பாதிக்கப்பட்ட 20 பேர்களுக்கு புத்தாடை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000/ ம் வழங்கப்பட்டன. ஆசிரியை சுவீட்லின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ‌. மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி தாளாளர் செல்வின் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory