» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சதுரங்க போட்டியில் சாதனை படைத்த நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
சனி 28, அக்டோபர் 2023 3:02:28 PM (IST)
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் சாதனை படைத்த நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நாசரேத் ஒய்எம்சிஏ மற்றும் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நடந்தது.போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ_ மாணவிகள் பங்கேற்றனர். இதில் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சதீஷ், அபூபக்கர், ஆண்டோ தர்ஷன் ஆகியோரும், 15 வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவர்கள் ஜஸ்டின் சாமுவேல், ஜெஸ்வின் இம்மானுவேல் ஆகியோரும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இது மட்டுமின்றி நாசரேத் வட்டார அளவில் அதிக புள்ளிகள் பெற்று வெற்றி கோப்பையும் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகித்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினார். இதில் பள்ளி உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர்,உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் பாராட்டினர்.