» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்.சிறப்பு முகாம்
செவ்வாய் 10, அக்டோபர் 2023 4:23:59 PM (IST)
விளாத்திகுளம் அருகே சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் பணிகளை கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்து பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்.சிறப்பு முகாம் ரெட்டியபட்டி கிராமத்தில் 7 நாட்கள் நடந்தது. முகாமுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி தலைமை தாங்கி மாணவ தொண்டர்களை வாழ்த்தி பேசினார். என்.எஸ்.எஸ்.திட்ட உதவி அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஆறுமுகசாமி வரவேற்று பேசினார்.
முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் ரெட்டியபட்டி கிராம தெருக்களை சுத்தம் செய்தல், கோயிலை சுத்தம் செய்தல், குடிநீர் குழாய்களை சுத்தம் செய்தல், நீர் சேகரிப்பு, புகையிலை ஒழிப்பு செயல்பாடு போன்ற பணிகளை செய்தனர். சேவை பணிகளை மேற்கொண்ட என். எஸ்.எஸ். மாணவ தொண்டர்களை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயப்பிரகாஷ் ராஜன்,பள்ளி பிரமுகர்கள் பால்பாண்டியன், தங்கமணி, மாரி கண்ணபிரான், காசிராஜன், என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டு பாராட்டினார்கள். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் கௌதமன் நன்றி கூறினார்.