» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாகலாபுரம் பள்ளியில் விழிப்புணர்வு சுவர் இதழ் போட்டி!
திங்கள் 9, அக்டோபர் 2023 5:24:04 PM (IST)
நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியில் "வாக்களிப்பதன் முக்கியத்துவம்" பற்றிய விழிப்புணர்வு "சுவர் இதழ்" போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியில் "வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு "சுவர் இதழ்" போட்டி நடைபெற்றது.பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ஆறுமுகச்சாமி போட்டியின் விதி முறைகளை எடுத்து விளக்கம் அளித்து துவங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
பள்ளி தேர்தல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகர்இன்பராஜ் மற்றும் முதுகலை வரலாறு ஆசிரியை சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்து போட்டிகளை நடத்தி முதல் மூன்று இடங்களை தேர்வு செய்தனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களை இடைநிலை ஆசிரியர் ரமேஷ் கலந்து கொண்டு பாராட்டினார்.
கோ. சுரேஷ்குமார் கோவில்பட்டி.Oct 10, 2023 - 04:16:43 PM | Posted IP 172.7*****