» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புறையூர் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!
திங்கள் 14, ஆகஸ்ட் 2023 9:45:04 AM (IST)
நாசரேத் அருகே உள்ள புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன
தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத் அருகே உள்ள புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புறையூர் வெல்பேர் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் செல்வி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுரேஷ் நியூமன் வரவேற்றார்
.முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மாணவ- மாணவிகளுக்கு சீருடை, காலணிகள், பேக் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில் புறையூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மாடசுவாமி, வெல்பேர் டிரஸ்ட் தொண்டு நிறுவன தலைவர் ஜாபர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பெல்சியா நன்றி கூறினார்.