» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

புறையூர் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்!

திங்கள் 14, ஆகஸ்ட் 2023 9:45:04 AM (IST)



நாசரேத் அருகே உள்ள புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன

தூத்துக்குடி மாவட்டம்,நாசரேத் அருகே உள்ள புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புறையூர் வெல்பேர் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் செல்வி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுரேஷ் நியூமன் வரவேற்றார் 

.முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மாணவ- மாணவிகளுக்கு சீருடை, காலணிகள், பேக் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார். இதில் புறையூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் மாடசுவாமி, வெல்பேர் டிரஸ்ட் தொண்டு நிறுவன தலைவர் ஜாபர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பெல்சியா நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory