» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
தட்டச்சர்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
புதன் 27, நவம்பர் 2024 10:33:34 AM (IST)
தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சர்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், தமிழ்நாடு அமைச்சுப் பணிகளில் தற்காலிக அடிப்படையில் தட்டச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன.
இந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில், சிறப்பு போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு திங்கள்கிழமை (நவ.25) முதல் விண்ணப்பிக்கலாம். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் (றறற.வnpளஉ.பழஎ.in) வழியாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 24. அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதியன்று தேர்வு நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத்துறை வங்கிகளில் 1,007 பணியிடங்கள்: ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 5, ஜூலை 2025 12:05:50 PM (IST)

மத்திய அரசு துறைகளில் 3,134 காலி பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி அறிவிப்பு
புதன் 25, ஜூன் 2025 10:36:10 AM (IST)

மீன்வளத் துறையில் பணியிடங்கள் : ஆட்சியர் தகவல்
சனி 21, ஜூன் 2025 7:36:44 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு
திங்கள் 16, ஜூன் 2025 4:56:01 PM (IST)

மத்திய அரசு துறைகளில் 14,582 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 12, ஜூன் 2025 4:47:07 PM (IST)

விமானப் படையில் 153 பணியிடங்கள் : ஜூன் 15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜூன் 2025 5:22:18 PM (IST)
