» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
சனி 23, நவம்பர் 2024 9:13:16 PM (IST)
திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க நவ.25க்குள் சுயவிவரக் குறிப்பு விவரங்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து, அவர்களை சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2008 இல் அமைக்கப்பட்டது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொருட்டு திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளதால் அதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் விருப்பப்படும் திருநங்கைகளின் சுயவிவரக் குறிப்பு விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து 25.11.2024 காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம் தூத்துக்குடி சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய அரசு துறைகளில் 14,582 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 12, ஜூன் 2025 4:47:07 PM (IST)

விமானப் படையில் 153 பணியிடங்கள் : ஜூன் 15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 2, ஜூன் 2025 5:22:18 PM (IST)

எஸ்பிஐ வங்கியில் மாதம் ரூ.48,480 சம்பளத்தில் 2964 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 22, மே 2025 5:44:22 PM (IST)

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST)

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST)
