» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 பணியிடங்கள் : மே 14க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 7, மே 2024 12:34:50 PM (IST)

ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்.பி.எஃப்) 4660 பணியிடங்களுக்கு மே 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பாதுகாப்புப் படைகளில் ரயில்வே பாதுகாப்புப் படையும் ஒன்றாகும். ரயில்வேயின் சொத்துக்கள் மற்றும் பயணிகளை பாதுகாப்பது இதன் பணியாகும். ரயில்வே பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகள் குடிமைப் பணித் தேர்வுகள் மூலம் பணியமர்த்தப்படுகிறார். ரயில்வே பாதுகாப்புப் படையில் கீழ்நிலை அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு, அந்தப் படையால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் நடத்தப்படுகிறது.

தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4660 உதவி காவல் ஆய்வாளர், காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மே 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்: RPF 01/2024 & RPF 02/2024

பணி: Sub Inspector (SI)

காலியிடங்கள்: 452

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400

பணி: Constable

காலியிடங்கள்: 4208

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், சிறுபான்மையினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbchennai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.5.2024


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory