» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு டிச. 27க்குள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 21, டிசம்பர் 2021 10:14:08 PM (IST)
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு வருகிற 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு 1-50 வயதிற்குட் பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட வாரியத்தால், நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பற்ற, சுயதொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராமத் தலைவர் மற்றும் கிராம சபை உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படும் முகவர்கள் ரூ.5 ஆயிரம் காப்பீட்டு தொகையாக, தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில், தங்கள் அருகிலுள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். தங்களது ஏஜென்சி காலம் முடிக்கப்படும்போது காப்பீட்டு தொகையாக செலுத்தப்பட்ட பணமானது, தகுந்த வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.
வேலைக்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 27-ம் தேதிக்குள் (திங்கட்கிழமை) முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோவில்பட்டி 627851 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்பிஐ வங்கியில் 996 காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.23!
சனி 6, டிசம்பர் 2025 12:02:37 PM (IST)

அஞ்சல்துறை வங்கியில் 348 பணி இடங்கள்: அக்.29க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 23, அக்டோபர் 2025 4:09:02 PM (IST)

7,565 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி., அறிவிப்பு!
வியாழன் 25, செப்டம்பர் 2025 12:48:27 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நீதிமன்ற அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 3:34:18 PM (IST)


