» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் : பும்ரா நீக்கம்!

வெள்ளி 27, ஜூன் 2025 10:51:40 AM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சனுக்கு பீல்டிங்கின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. 

காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 2-வது போட்டிக்கு முன் முழு உடற்தகுதி பெற்றால் அவர் களமிறங்குவார் என்று கூறப்பபடுகிறது. இந்நிலையில் 2வது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பர்மிங்காம் சென்ற இந்திய அணியுடன் அவர் பயணிக்கவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்த 2வது போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் போட்டியில் பும்ரா விளையாடுவதற்காக 2வது போட்டியில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory