» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!

திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)



குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியைப் பாராட்டி கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார் ஸ்கூட்டர் பரிசளித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒய்.எஸ்.அக்சயாவு பனிரெண்டாம் வகுப்பில் 590 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். அவருக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார் தனது சொந்த செலவில் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் பல சாதனைகளை படைக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory