» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கைத் தமிழா்களுக்காக தனி நாடு: பிரதமர் மோடிக்கு ஆதீனம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஜூன் 2024 10:17:38 AM (IST)
இலங்கையில் தமிழா்களுக்கான தனி நாட்டை பிரதமா் நரேந்திர மோடி உருவாக்கித் தர வேண்டும் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா் வேண்டுகோள் விடுத்தாா்.

மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் நல்ல வாக்குகளைப் பெற்றுள்ளன. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழா்கள் கொன்று குவிக்கப்பட காரணமானவா்களும் வெற்றி பெற்று விட்டாா்களே என்ற மன வருத்தம் எனக்கு உள்ளது.
தற்போது, 3-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடியிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின் போது, இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வாா்த்துக் கொடுத்த கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவு மீட்டெடுக்கப்பட்டால், தமிழகத்தின் மீன் வளம் அதிகரிக்கும். எனவே, கச்சத்தீவை மீட்டு, தமிழகத்தோடு இணைக்க வேண்டும்.
அடுத்து, இலங்கையில் வசித்து வரும் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு தமிழா்களுக்கான தனி நாட்டை பிரதமா் மோடி உருவாக்கித் தர வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. ஆனால், தோ்தல் நேரங்களில் மட்டுமே கச்சத்தீவு விவகாரம் குறித்து கட்சிகள் பேசுகின்றன என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திங்கள் 19, மே 2025 5:36:50 PM (IST)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேர் கைது 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்!
திங்கள் 19, மே 2025 5:11:25 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு!
திங்கள் 19, மே 2025 4:03:34 PM (IST)

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 19, மே 2025 3:24:44 PM (IST)

கர்ப்பிணி தாய்மார்களுக்கான கவனிப்பு பிரிவுகள் : அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
திங்கள் 19, மே 2025 12:54:24 PM (IST)

குளியலறையில் ரகசிய கேமரா: இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டிய ராணுவ கைது!
திங்கள் 19, மே 2025 12:43:02 PM (IST)
