» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரேஷன் கடைகளில் தட்டுப்பாடில்லாமல் பொருட்கள் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
வியாழன் 23, மே 2024 4:24:07 PM (IST)
தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
![](https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/GKvasan291_1467773908_1562397990_1716461667.jpg)
அதாவது ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் பிரதிமாதம் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஆகிறது என்றும் பொருட்களின் அளவும், தரமும் குறைவாக இருப்பதாகவும் பொது மக்கள் குறை கூறுகின்றனர். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. குறிப்பாக பருப்பு மற்றும் ஆயில் தட்டுப்பாடு அவ்வப்போது உள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பொருட்களை கொள்முதல் செய்வதில் காலதாமதம் செய்யாமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கவனத்தில் கொண்டு காலத்தே கொள்முதல் செய்ய வேண்டும்.
தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி, சர்க்கரை மற்றும் கோதுமை உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களின் தரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் விற்கப்படும் இதர கட்டுப்பாடற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. ரேஷன் கடைகளில் இருந்து கள்ளச்சந்தைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
எனவே தமிழக அரசு ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் அனைத்தையும் தரமாக, சரியான அளவோடு, முறையாக, உரிய நேரத்தில் வழங்கவும், பொருட்கள் கள்ளச்சந்தைக்கு விற்கப்படுவதை தடுக்கவும், குடும்ப அட்டைதாரர்களின் மற்றும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/manjolai43i34i_1718517859.jpg)
தேயிலை தோட்டத்தில் பணிக்காலம் முடிந்தது; விடைபெற்ற மாஞ்சோலை தொழிலாளர்கள்
ஞாயிறு 16, ஜூன் 2024 11:31:36 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/gasbusramnad_1718452364.jpg)
இயற்கை எரிவாயு மூலம் அரசு பஸ்கள் இயக்கம் : முதன்முறையாக ராமநாதபுரத்தில் அறிமுகம்
சனி 15, ஜூன் 2024 5:23:18 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/palaiariyankavu_1718449092.jpg)
மேலப்பாட்டம் ஆயிரங்காவய்யன் கோவில் வருஷாபிஷேகம் விழா!
சனி 15, ஜூன் 2024 4:26:20 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/canbumanipmk_1718447465.jpg)
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: பா.ம.க வேட்பாளர் அறிவிப்பு
சனி 15, ஜூன் 2024 4:00:08 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/cpmofficeattack_1718435927.jpg)
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் மார்க்சிஸ்ட் அலுவலகம்சூறை: 13 பேர் கைது!
சனி 15, ஜூன் 2024 12:48:15 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/arrested_1718435665.jpg)
ஓய்வு பெற்ற பொறியாளா் வீட்டில் 17 பவுன் தங்க நகைகள் திருட்டு: 3 போ் கைது
சனி 15, ஜூன் 2024 12:45:05 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/cmst34l43i3ii_1718433159.jpg)