» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மணிமுத்தாறு அனையில் இருந்து தண்ணீர் திறப்பு : அரசாணை வெளியீடு
வியாழன் 9, மே 2024 10:02:02 AM (IST)
மணிமுத்தாறு அணையிலிருந்து இன்று (மே 9) முதல் 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2756.62 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு 09.05.2024 முதல் 05.09.2024 வரை 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 612.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட ஆளுநரின் ஆணைப்படி அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.